search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பறவை காய்ச்சல்"

    • பறவை காய்ச்சல் நோய், கோழி, வாத்து, வான்கோழி, நீர்ப்பறவைகள், வனப் பறவைகளை தாக்கும்.
    • கோழி பண்ணையாளர்களுக்கு பறவை காய்ச்சல் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தியுள்ளோம்.

    ஈரோடு:

    கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் கோழிகளை தாக்கும் பறவை காய்ச்சல் உறுதியானதால் தமிழகத்தில் தொற்று பரவாமல் தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    கேரளா மாநில எல்லைப் பகுதிகளில் கால்நடை மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்புடன் கேரளாவில் இருந்து கோழிகளை ஏற்றி வரும் வாகனங்கள் மீது கிருமி நாசினி மருந்து தெளித்து தமிழகத்தில் அனுமதிக்கின்றனர்.

    தொற்று பரவக்கூடியது என்பதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோடு மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் பழனிவேல் கூறியதாவது:-

    பறவை காய்ச்சல் நோய், கோழி, வாத்து, வான்கோழி, நீர்ப்பறவைகள், வனப் பறவைகளை தாக்கும்.

    பறவைக் காய்ச்சல் வைரஸ் கிருமிகள் பல வகை இருந்தாலும், எச்5என்1 என்ற வகை வைரஸ் கிருமி அதிக வீரியம் வாய்ந்தது. நோய் பாதித்த பண்ணைகளில் இறந்த கோழிகள், கோழி கழிவுகள், பண்ணை உபகரணங்கள், கோழி தீவனம் மூலம் இந்நோய் பரவும். இந்நோய்க்கு சிகிச்சை இல்லை.

    நோய் வராமல் தடுக்க நோய் தடுப்பு முறைகள், உயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் 65 முட்டை கோழி பண்ணைகளில் 32.38 லட்சம் முட்டை கோழிகள், 568 கறிக்கோழி பண்ணைகளில், 27.57 லட்சம் கறிக்கோழிகள், 56 நாட்டுக்கோழி பண்ணைகளில் 2.31 லட்சம் நாட்டுக்கோழிகள் உள்ளன.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து கோழி பண்ணைகள் புறக்கடை கோழிகளை நேரில் ஆய்வு செய்து மாதிரிகள் சேகரித்து கண்காணிக்கிறோம். வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தை தினமும் பார்வையிட்டு, பறவைகளின் நோய் அறிகுறியை கண்காணிக்கிறோம்.

    நோய் தடுப்பு நடவடிக்கைக்காக 50 அதிவிரைவு செயலாக்க குழு அமைத்து தயார் நிலையில் வைத்துள்ளோம். கோழி பண்ணையாளர்களுக்கு பறவை காய்ச்சல் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தியுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பண்ணைகளில் வாத்துகள், கோழிகள் தொடர்ச்சியாக உயிரிழந்தன.
    • கேரளாவையொட்டியுள்ள உள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    களியக்காவிளை:

    கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பறவை காய்ச்சல் தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. ஆலப்புழா மாவட்டத்தில் குட்டநாடு பகுதியில் அமைந்திருக்கும் பண்ணைகளில் வாத்துகள், கோழிகள் தொடர்ச்சியாக உயிரிழந்தன.

    இதுகுறித்து நடத்தப்பட்ட சோதனையில் அவைகளுக்கு பறவை காய்ச்சல் தொற்று பரவி இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து பறவை காய்ச்சலை தடுக்க கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தொற்று கண்டறியப்பட்ட இடத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் சுற்றளவு வரை வளர்க்கப்படும் கோழி, வாத்து, காடை போன்ற பறவைகளை அழிக்கும் பணி தொடங்கி உள்ளது.

    கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் அண்டை மாநிலமான தமிழகத்திற்கும் பரவலாம் என்பதால், இதனை தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. கேரளாவையொட்டியுள்ள உள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி தமிழக-கேரள எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் படந்தா லுமூடு சோதனை சாவடியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வாத்து, கோழி, கோழி முட்டை மற்றும் கோழி தீவணங்களுடன் வரும் வாகனங்களை கண்காணித்து அவற்றை கேரளாவுக்கே திருப்பி அனுப்பி வருகின்றனர்.

    மேலும் காய்கறி உள்ளிட்ட உணவு பொருள்களை ஏற்றி வரும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளித்து நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    • கேரள மாநிலம் ஆலப்புழாவில் வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
    • கேரளாவில் இருந்து கோவை மாவட்டத்திற்கு வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கோவை:

    கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் எடத்வா மற்றும் செருதளா கிராமங்களில் உள்ள சில கோழி பண்ணைகளில் வாத்துகள் அடுத்தடுத்து இறந்தது. இறந்த வாத்துகளை ஆய்வு செய்ததில் எச்5என்1 என்ற பறவை காய்ச்சல் இருப்பது உறுதியானது.

    இதையடுத்து கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கேரளாவில் பறவை காய்ச்சல் பரவியுள்ளதால், தமிழக எல்லைப்பகுதியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி தமிழக கேரள எல்லைப்பகுதிகளான ஆனைகட்டி, வாளையாறு, வேலந்தாவளம், மேல்பாவி, முள்ளி, மீனாட்சிபுரம், கோபாலபுரம், செம்மனாம்பதி, வீரப்ப கவுண்டன்புதூர், நடுப்புணி, ஜமீன் காளியாபுரம், வடக்காடு உள்ளிட்ட 12 சோதனை சாவடிகளில் சிறப்பு கால்நடை பராமரிப்புத்துறையின் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இவர்கள் கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களில் கோழி தொடர்பான பொருட்கள் கொண்டு வரப்படுகிறதா? என்பதை கண்காணித்து வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கேரள மாநிலம் ஆலப்புழாவில் வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

    இதையடுத்து தமிழக, கேரள எல்லையான வாளையார் உள்பட 12 சோதனை சாவடிகளிலும் சிறப்பு கால்நடை குழுவினர் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த குழுவில் ஒரு கால்நடை மருத்துவர், ஒரு கால்நடை ஆய்வாளர், 2 கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் உள்ளனர்.

    கேரளாவில் இருந்து கோவைக்கு கொண்டு வரப்படும் கறிக்கோழிகள், கோழிகளின் எரு, கோழி முட்டைகள், கோழிக்குஞ்சுகள், வாத்துகள், வாத்து முட்டைகள் உள்ளிட்ட பறவைகள் தொடர்பாக பொருட்களை கொண்டு வரும் வாகனங்களை எல்லையிலேயே நிறுத்தி கேரளாவுக்கு திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

    கேரளாவில் இருந்து கோவை மாவட்டத்திற்கு வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தவிர மாவட்டத்தில் 1252 கோழிப்பண்ணைகள் உள்ளது. இந்த பண்ணைகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக கண்காணித்து வருகிறோம்.

    மேலும் பண்ணைகளில் திடீர் கோழி உயிரிழப்புகள், பறவை காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கால்நடை துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும் என உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நீர் நிலைகளில் உள்ள பறவைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    தவிர கோழிப்பண்ணைகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பதை கண்டறிய 432 மாதிரிகள் எடுத்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பறவை காய்ச்சல் அறிகுறிகள் தென்படவில்லை.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆலப்புழா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் வர்க்கீஸ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
    • பண்ணைகள் மற்றும் வீடுகளில் வளர்க்கப்பட்ட பறவைகள் தனியாக ஒரு இடத்திற்கு எடுத்து செல்லப்பட்டு சுகாதாரத்துறையினர் அழித்து வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் ஏராளமான வாத்து மற்றும் கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. அந்த பண்ணைகளில் வளர்க்கப்படும் பறவைகள் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

    இந்நிலையில் ஆலப்புழா மாவட்டம் எடத்துவா பகுதியில் உள்ள பண்ணையில் வாத்துக்கள் தொடர்ச்சியாக இறந்தன. இதனால் பறவை காய்ச்சல் பாதிப்பு இருக்கும் என்று கருதப்பட்டது. இதையடுத்து இறந்த வாத்துக்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு போபாலில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது.

    அங்கு நடத்தப்பட்ட சோதனையில் வாத்துக்களுக்கு ஏவியான் இன்புளூ வன்சா என்ற பறவை காய்ச்சல் தொற்று பரவி இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஆலப்புழா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் வர்க்கீஸ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

    அதில் எடத்துவா பஞ்சாயத்து முதலாவது வார்டில் பறவை காய்ச்சல் தொற்று பாதித்திருந்த இடத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் சுற்றளவில் வளர்க்கப்படும் வாத்து உள்ளிட்ட பறவை இனங்களை அழிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் அந்த பகுதியில் இருக்கும் பறவைகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது.

    அதில் தொற்று பாதித்த பகுதிக்கு அருகே 21,537 பறவைகள் வளர்க்கப்பட்டு வருவது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பறவைகளை கொன்று எரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பறவைகளை கொல்லும் பணியை சுகாதாரத்துறை ஊழியர்கள் இன்று தொடங்கினர்.

    பண்ணைகள் மற்றும் வீடுகளில் வளர்க்கப்பட்ட பறவைகள் தனியாக ஒரு இடத்திற்கு எடுத்து செல்லப்பட்டு சுகாதாரத்துறையினர் அழித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதிகள் முழுவதும் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    பறவை காய்ச்சல் பாதித்த பகுதிகளில் கோழி, வாத்து, காடை போன்ற நாட்டு பறவைகள் மற்றும் அவற்றின் முட்டைகளை உண்ணவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வருகிற 25-ந்தேதி வரை அமலில் இருக்கும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் உடனடியாக சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
    • பறவை காய்ச்சலில் இறந்த வாத்துக்கள் இருந்த பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை நிலவுகிறது.

    கோடை மழை பெய்து வரும் நிலையில் கேரளாவில் டெங்கு, அம்மை உள்ளிட்ட நோய்களும் பருவ தொடங்கி இருக்கிறது. இதனால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர். இந்நிலையில் கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஆலப்புழாவில் உள்ள எடத்துவா மற்றும் மேலும் ஒரு பஞ்சாயத்தில் விவசாய நிலத்தில் வளர்க்கப்பட்ட வாத்துக்கள் அடுத்தடுத்து இறந்தபடி இருந்தன. இதனால் இறந்த வாத்துக்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு போபாலில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் இறந்த வாத்துக்களுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் உடனடியாக சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பறவை காய்ச்சலில் இறந்த வாத்துக்கள் இருந்த பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த இடத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தொலைவில் செயல்பட்டு வரும் பண்ணையில் வளர்க்கப்படும் பறவைகளை அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான திட்டத்தை மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடங்கி இருக்கின்றனர். பறவை காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டபோதிலும் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எளாவூர் சோதனை சாவடியில் 3-வது நாளாக வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.
    • சோதனை சாவடியில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு சோதனை மேற்கொண்டு இருக்கின்றனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் தமிழக எல்லையில் சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடி வழியாக தினந்தோறும் ஆந்திரா, பீகார், ஒடிசா, மராட்டியம், டெல்லி, அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து கனரக வாகனங்கள் மூலம் காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி கொண்டு வரப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆந்திராவில் இருந்து கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் கஞ்சா, செம்மரக்கட்டைகள் தொடர்ந்து கடத்தி வரப்படுவதாகவும், ஹவாலா பணம் கடத்தப்படுவதாகவும் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து இந்த சோதனை சாவடியில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு சோதனை மேற்கொண்டு இருக்கின்றனர்.

    இந்த நிலையில் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்ட த்தில் சமீப காலமாக பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்குள்ள கோழிகள் மற்றும் பறவைகள் இறக்கின்றன.

    இதையடுத்து கும்மிடிப்பூண்டி கால்நடை மருத்துவர்கள் ஆந்திராவை ஒட்டி தமிழக எல்லையில் அமைந்துள்ள எளாவூர் சோதனை சாவடியில் சிறப்பு முகாம் அமைத்துள்ளனர். ஆந்திராவில் இருந்து வரும் வாகனங்களை ஒவ்வொன்றாக நிறுத்தி டயர் மற்றும் வாகனத்தின் வெளிப்புற பகுதியில் கால்நடைத்துறை ஊழியர்கள் கிருமிநாசினி மருந்து தெளித்து அனுப்பி வருகின்றனர். கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் கடந்த 17-ந்தேதி தொடங்கின.

    இன்று 3-வது நாளாக வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் 3 ஷிப்டுகளில் நடந்து வருகிறது.

    • மாநிலம் முழுவதும் 721 குழுக்களும், நெல்லூர் மாவட்டத்தில் 37 குழுக்களும் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
    • கோழிகள் இறந்த பகுதியை சுற்றியுள்ள 10 கிலோ மீட்டர் சுற்றளவில் 3 நாட்களுக்கு சிக்கன் கடைகளை மூட வேண்டும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், பொடலகுரு மண்டலம் சட்லகுட்டா, கும்மல்லா திப்பா ஆகிய பகுதிகளில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்கி 100-க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்தன.

    திருப்பதி மாவட்டம் போல் புலிக்காட் ஏரியில் இருந்து புலம் பெயர்ந்த பறவைகள் மூலம் இந்த நோய் பரவியுள்ளது. ஆந்திராவில் இதனை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மாநிலம் முழுவதும் 721 குழுக்களும், நெல்லூர் மாவட்டத்தில் 37 குழுக்களும் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    பல்வேறு இடங்களில் கோழிகளை புதைத்து வருகின்றனர். இந்நிலையில் நெல்லூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஹரிநாரயணன் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கலெக்டர் கூறியதாவது:-

    கோழிகள் இறந்த பகுதியை சுற்றியுள்ள 10 கிலோ மீட்டர் சுற்றளவில் 3 நாட்களுக்கு சிக்கன் கடைகளை மூட வேண்டும். ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள சிக்கன் கடைகள் 3 மாதங்களுக்கு திறக்கக்கூடாது. இறந்த கோழிகளை மண்ணில் புதைக்க வேண்டும்.

    15 நாட்களுக்கு கோழிகள் வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்யாமலும், இறக்குமதி செய்யாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் மாவட்ட போலீசார் மற்றும் மாவட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரிகள் 2 கிராமங்களிலும் கிராம கூட்டங்களை நடத்த வேண்டும்.

    கடை உரிமையாளர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அந்தந்த கிராமங்களின் எல்லைக்குள் சுத்திகரிப்பு செய்து நோய்தொற்றை தடுக்க பூச்சி மருந்து தெளிக்க வேண்டும்.

    பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால், மனிதர்களின் நுரையீரலில் உள்ள சுவாச மண்டலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

    எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இதையடுத்து ஆந்திர மாநில எல்லையில் உள்ள வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. சுகாதார துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எச்.3.என்.8. வைரஸ் மனிதர்களுக்கும் பரவுவது கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு உறுதிப்படுத்தப்பட்டது.
    • 2022-ம் ஆண்டு மத்திய சீனாவில் 4 வயது சிறுவனுக்கு பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட்டது.

    பீஜிங்:

    சீனாவில் பறவை காய்ச்சலுக்கு (எச்3என்8) முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. குவாங்டாங் மாகாணம் ஜாங்ஷான் நகரை சேர்ந்த 58 வயது பெண்ணுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

    கடுமையான நிமோனியாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

    அந்த பெண் நோய் பாதிப்புக்கு உள்ளாவதற்கு முன்பு ஒரு கோழிபண்ணைக்கு சென்றார் என்றும் அங்கு சேகரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் மாதிரிகளில் பறவை காய்ச்சலுக்கு சாதகமான வைரஸ்கள் இருந்ததும் கண்டறியப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது சீனாவில் பறவை காய்ச்சலுக்கு ஏற்பட்ட முதல் உயிரிழப்பு ஆகும். எச்.3.என்.8. வைரஸ் மனிதர்களுக்கும் பரவுவது கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு உறுதிப்படுத்தப்பட்டது.

    2022-ம் ஆண்டு மத்திய சீனாவில் 4 வயது சிறுவனுக்கு பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட்டது. அதில் இருந்து அவன் குணம் அடைந்தான். அதன்பின் அதே ஆண்டு மே மாதம் ஹெனான் மாகாணத்தை சேர்ந்த 5 வயது சிறுவன் பாதிக்கப்பட்டான். அவனுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்தன.

    இதற்கிடையேதான் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மூன்றாவது நபர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து சீனாவில் பறவை காய்ச்சல் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இன்று வரை பல நாடுகளில் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. இதில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

    இந்த நிலையில் சீனாவில் பறவை காய்ச்சலுக்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜப்பானின் பல்வேறு மாகாணங்களில் கடந்த ஆண்டு இறுதியில் இருந்து பறவை காய்ச்சல் பரவி வருகிறது.
    • கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஜப்பானில் பறவை காய்ச்சல் காரணமாக 1 கோடியே 65 லட்சத்துக்கும் அதிகமான கோழிகள் அழிக்கப்பட்டுள்ளன.

    டோக்கியோ:

    ஜப்பானின் பல்வேறு மாகாணங்களில் கடந்த ஆண்டு இறுதியில் இருந்து பறவை காய்ச்சல் பரவி வருகிறது. நாட்டில் உள்ள 47 மாகாணங்களில் 26 மாகாணங்களில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஹொக்கைடோ மாகாணத்தில் உள்ள ஒரு கோழி பண்ணையில் நேற்று முன்தினம் டஜன் கணக்கான கோழிகள் செத்தன. அதை தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில் கோழிகள் பறவை காய்ச்சலால் உயிரிழந்தது தெரியவந்தது.

    இதையடுத்து பண்ணையில் இருந்து மாகாணத்தின் பிற பகுதிகளுக்கு பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்க பண்ணையில் உள்ள 5 லட்சத்து 58 ஆயிரம் கோழிகளை அழிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஜப்பானில் பறவை காய்ச்சல் காரணமாக 1 கோடியே 65 லட்சத்துக்கும் அதிகமான கோழிகள் அழிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் ஆப்ரிக்கன் புளூ எனப்படும் பன்றி காய்ச்சல் பரவியது தெரியவந்தது.
    • நோய் பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்பட்ட பன்றிகளை உடனடியாக அழிக்க முடிவு செய்யப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து கேரள சுகாதாரத்துறை மற்றும் கால்நடை துறையினர் இணைந்து அந்த பகுதியில் சோதனை நடத்தினர். இதில் பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ள பண்ணைகளில் வளர்க்கப்பட்ட சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான கோழிகள் மற்றும் வாத்துக்கள் அழிக்கப்பட்டன.

    மேலும் அங்கு உற்பத்தி செய்யப்பட்ட முட்டைகளை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து பண்ணைகள் உள்ள பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள பகுதிகளும் கண்காணிக்கப்பட்டு வந்தன.

    இந்த நிலையில் கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் ஆப்ரிக்கன் புளூ எனப்படும் பன்றி காய்ச்சல் பரவியது தெரியவந்தது.

    இதையடுத்து சுகாதாரத்துறையினர் அந்த பகுதியில் உள்ள பண்ணைகளில் ஆய்வு செய்தனர். இதில் ஒரு பண்ணையில் இருந்த 70 பன்றிகள் நோய் பாதிப்பு ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது.

    இதுபற்றி தெரியவந்ததும் மாவட்ட நிர்வாகம் அவசர ஆலோசனை நடத்தியது. பின்னர் நோய் பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்பட்ட பன்றிகளை உடனடியாக அழிக்க முடிவு செய்யப்பட்டது.

    இந்த பண்ணைகளில் தற்போது 532 பன்றிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அவற்றை இன்று அழிக்கும் பணி தொடங்கியது. இதனை சுகாதாரத்துறையினரும், கால்நடை துறையினரும் இணைந்து மேற்கொண்டனர். மேலும் இந்த பகுதிகளில் அவர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • கேரள மாநிலத்தில் அவ்வப்போது ஏற்படும் பறவை காய்ச்சல் நோய் தமிழக பண்ணையாளர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.
    • கோழிகளுக்கு கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 4½ கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

    இந்த நிலையில் கேரள மாநிலத்தில் அவ்வப்போது ஏற்படும் பறவை காய்ச்சல் நோய் தமிழக பண்ணையாளர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது. அதன்படி திருவனந்தபுரம் பெருமாங்குழி பகுதியில் பறவை காய்ச்சல் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து சுமார் 2 ஆயிரம் கோழி, வாத்துகளை அழிக்க முடிவு செய்துள்ள கேரள அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.

    தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவுக்கு தினசரி சுமார் 1 கோடி முட்டைகள் மற்றும் அதிகளவில் கோழிகள் விற்பனைக்காக லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. கேரளாவில் உறுதி செய்யப்பட்டுள்ள பறவை காய்ச்சலால் தமிழகத்தில் கோழிப்பண்ணை தொழிலில் பாதிப்பு ஏற்படும் என கோழிப்பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    இதற்கிடையே நாமக்கல் பகுதியில் நிலவும் தட்பவெப்பநிலைக்கு பறவை காய்ச்சல் நோய் கிருமிகள் பரவ வாய்ப்பு இல்லை என வல்லுநர் குழு தெரிவித்து இருந்தாலும், நாமக்கல் மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள கோழிப்பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கோழிப்பண்ணையாளர்கள் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

    குறிப்பாக கோழிகளுக்கு கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் பெரும்பாலான பண்ணைகளில் வெளியில் இருந்து வரும் வாகனங்களை கிருமிநாசினி தெளித்த பின்னரே பண்ணைக்குள் அனுமதிக்கின்றனர்.

    • பறவை காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொடர்பாக திருவனந்தபுரம் மாவட்ட கலெக்டர் ஜெரோமிக் ஜார்ஜ் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • நோய் பாதிக்கப்பட்ட பண்ணையை சுற்றியுள்ள 9 கிலோ மீட்டர் பகுதியில் கோழி இறைச்சி, முட்டை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் மாவட்டம் அழுர் அருகே பெருமாங்குழி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கோழி, வாத்து பண்ணைகள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான கோழி, வாத்துகள் வளர்க்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த கோழிகளும், வாத்துகளும் அடுத்தடுத்து இறந்தன.

    அதைத்தொடர்ந்து இவற்றின் ரத்த மாதிரி பரிசோதனைக்காக போபாலில் உள்ள பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையின் முடிவில் பறவை காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து பறவை காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொடர்பாக திருவனந்தபுரம் மாவட்ட கலெக்டர் ஜெரோமிக் ஜார்ஜ் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பறவை காய்ச்சல் பரவிய பண்ணையில் உள்ள கோழிகள், வாத்துகளையும், மேலும் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து பறவைகளையும் அழிக்க முடிவு செய்யப்பட்டது.

    முதல் கட்டமாக 2 ஆயிரம் பறவைகளை இன்று (திங்கட்கிழமை) அழிக்க முடிவு செய்துள்ளனர். மேலும் நோய் பாதிக்கப்பட்ட பண்ணையை சுற்றியுள்ள 9 கிலோ மீட்டர் பகுதியில் கோழி இறைச்சி, முட்டை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை தவிர வெளிப்பகுதிகளில் இருந்து இங்கு முட்டை, இறைச்சி கொண்டு வரவும், இங்கிருந்து வெளியிடங்களுக்கு கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ×